யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதான நிலையில் அவரை புனர்வாழ்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் 26 ம் திகதியான நேற்றையதினம் 340 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளை, அவரை 6 மாதங்களுக்கு புனர்வாழ்விற்கு உட்படுத்துமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவுப்பிறப்பித்துள்ளார்.