இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட யாழ் ராணி புகையிரதம் காலை 7.30 மணியளவில் பளை கச்சாய் வெளி புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த சம்பவத்தில் பளை தம்பகாமம் பகுதியைச் சேர்ந்த 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
