சாதமுல்ல பகுதியில் T-56 துப்பாக்கி, இரண்டு மகசின்கள், 45 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பிரிவின் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் நெருங்கிய நண்பர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கியானது, திட்டமிடப்பட்டிருந்த பல கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படவிருந்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
