நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் தேநீர் வகைகளைத் தவிர்த்து வேறு சில ஆரோக்கியமான தேநீர் வகைகளை வீட்டிலேயே செய்யலாம்.
ஆயுர்வேத, சித்த மருத்துவமானது ரோஜாப்பூ தேநீர் அதில் முக்கியமானது.
இதனைக் குடித்தால் உடல் மாத்திரமின்றி சரும அழகினையும் பாதுகாக்கலாம்.
ரோஜாவில் விட்டமின் C அதிகம் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை அதிக பலமுடன் வைத்துக்கொள்ளும்.
வெளியிலில் இருந்து உங்களின் உடலில் ஏதேனும் நோய் கிருமிகள் உட்புகுந்தால், அவற்றை எதிர்த்துப் போராடக் கூடிய தன்மை இதில் உள்ளது.
அளவுக்கு அதிகமான உணவுகளாலும், தேவையற்ற பழக்கத்தாலும் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
இந்த ரோஜாப்பூ தேநீர் செரிமான பிரச்சினைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.
ரோஜாப்பூ தேநீர் ஒரு அற்புத மூலிகையாக நமது உடலுக்குள் செயற்படுகிறது.
குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் வலிகள், மற்றும் மலட்டுத் தன்மை ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்தாக உள்ளது.
இருமல் அல்லது தொண்டை சார்ந்த பிரச்சினை இருந்தால், ரோஜாப்பூ தேநீர் குடித்து வாருங்கள்.
இது அருமையான பலனை உங்களுக்குத் தருகிறது. மேலும், தொண்டையில் உள்ள தொற்றுக்களையும், கிருமிகளையும் அழித்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.