இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல பிராந்தியங்களுக்கு வெப்ப அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை
விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்தி, வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் நாளைய தினம் வெப்பநிலை உயர்வு ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
மேலும், இரத்தினபுரி மற்றும் மொனராகல மாவட்டங்களிலும் வெப்ப நிலை உயர்வை அவதானிக்க முடியும் எனவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.