Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

எந்த உணவை எந்த உணவோடு சேர்த்து சாப்பிடக் கூடாது ….

ஏப்ரல் 14, 2025
படிக்க 4 நிமிடங்கள்
SHARE

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் சத்தான உணவுகளைத்தான் சாப்பிடுகிறோமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும், நாம் உணவருந்தும்போது சில தவறுகளை நமக்குத் தெரியாமலே செய்கிறோம். சில உணவுகளுடன் சில உணவுகளைச் சேர்த்து சாப்பிடக் கூடாது.

எனவேதான் உடலில் சில உபாதைகளும் நோய்களும் ஏற்படுகின்றன. நாம் உணவு முறைகளை சரியாக எடுத்துக்கொள்ளாதபோதும் நம் உடல் பலவீனமாகின்றது.

எனவேதான் காலை உணவை 10 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். மதிய உணவை

ஒரு மணிக்குள் சாப்பிட வேண்டும். இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினாலே நமது உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் உணவுகளில் சிலவற்றை சேர்த்து சாப்பிடக் கூடாது.

தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே, இரண்டையும் சேர்த்து உண்ணக் கூடாது. இவற்றில் ஏதாவதொன்றை ஒரேநேரத்தில் சாப்பிட வேண்டும்.

உடல் மெலிந்தவர்கள் புழுங்கலரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

உடல் பருத்தவர்கள் கோதுமை உணவு உண்பது நல்லது.

ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

மூல நோய் உள்ளவர்கள் முட்டை, அதிக காரம், மாமிச உணவு ஆகியவற்றை உண்ணக் கூடாது.

நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் வைத்து உபயோகிக்கக் கூடாது.

காலையில் வெறும் வயிற்றில் காப்பி, ரீ குடிக்கக் கூடாது. ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர், காப்பி, ரீ போன்றவைகளைக் குடிக்கலாம்.

அல்சர் உள்ளவர்களும் மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

பெண்கள் வீட்டுக்குத் தூரமான நாட்களில் கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், புடலங்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிக காரம், அதிக புளிப்பு, கொத்தவரங்காய், பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

மூட்டுவலி, வாத நோயாளிகள் அசைவ உணவுகள், முட்டை, கிழங்கு வகைகளைச் சாப்பிடக் கூடாது.

பசளைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ள ஒரே பண்பு உடலில் தோஷத்தை உண்டுபண்ணுவதால் இத்தகைய பாதிப்புகள் உண்டாகின்றன.

தேன் சாப்பிட்ட பிறகு வைனோ அல்லது இனிப்பு உணவுகளோ சாப்பிடக் கூடாது. இதனால் சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகக்கூடும்.

முருங்கை, முள்ளங்கி மற்றும் பூண்டு உணவுகளை சாப்பிட்ட பின் பால் அருந்தக் கூடாது. இதனால் சரும அலர்ஜிகள் உண்டாகும்.

எலுமிச்சை, மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை போன்ற புளிப்பான பழங்களுடனோ அல்லது அவற்றைச் சாப்பிட்டவுடனோ பால் குடித்தால் ஜீரணம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

வாழைப்பழத்தை தயிர், மோருடன் கலந்து சாப்பிடக் கூடாது. வாழைப்பழம் சாப்பிட்டவுடனும் தயிர், மோர் சாப்பிடக் கூடாது. இவை உடலில் தோஷம் உண்டாகும் வாய்ப்புகளை உண்டாக்கிவிடும்.

பழங்களைத் தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக் கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.

வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அது செரிமானக் கோளாறை ஏற்படுத்திவிடும்.

மேலும், கோதுமையை நல்லெண்ணெயுடன் சமைத்து சாப்பிடக் கூடாது.

மீன், கருவாடு சாப்பிட்டவுடன் பால், தயிர் சாப்பிடக் கூடாது. அவ்வாறு மீறி உண்டால் ‘வெண் மேகம்’ போன்ற

நோய்கள் வர வாய்ப்புள்ளது.

தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே, இரண்டையும் சேர்த்து உண்ணக் கூடாது.

பால் மற்றும் மீன் உணவுகளை எப்போதுமே சேர்த்து சாப்பிடக் கூடாது.

பால் என்பது குளிர்ச்சியூட்டும் உணவுப்பொருள், ஆனால், மீன் வெப்பமூட்டும் தன்மையைக் கொண்டது. இந்த இரண்டு உணவையும் சேர்த்து உண்பது இரத்தம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும்.

பலாப்பழம், முள்ளங்கி ஆகியவற்றை கறுப்பு உளுந்தில் தயாரான உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

சமைத்த உணவையும் சமைக்காத உணவையும் கலப்பது தவறு. உதாரணமாக, சமைத்த சாதத்துடன் சாலட் சேர்த்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு உண்டாகும்.

இறைச்சியோடு தேன் மற்றும் வேகவைத்த முள்ளங்கி, கறுப்பு உளுந்து, முளைகட்டிய பயறு வகைகளைச் சேர்த்து சாப்பிடுவது தவறு. ஏனென்றால், அஜீரணம், குமட்டல், வாந்தி, படபடப்பு ஆகியவையும் உண்டாகலாம்.

பால், யோகர்ட், வெள்ளரி, தக்காளி இவற்றோடு எலுமிச்சையை சேர்த்து சாப்பிடுவது தவறான பழக்கம். இது அசிடிட்டிக்கு வழிவகுத்து, வயிற்றுப் பிரச்சினையை உண்டாக்கிவிடும்.

பழங்கள் சாப்பிடும்போது உருளைக் கிழங்கு, சீஸ், வறுத்த உணவுகள் போன்ற மா வகை உணவுகளைச் சேர்த்து

சாப்பிடக் கூடாது. இதனால், செரிமானக்கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது.

நெய்யுடன் தேனை கலந்து சாப்பிடக் கூடாது. ஒரேநேரத்திலும் சாப்பிடக் கூடாது. ஏனெனில், இரண்டும் சேர்ந்தால் நஞ்சாகி விடும்.

மோர், தயிர், பால் சாப்பிடும்போது வாழைப்பழம் சாப்பிடக் கூடாது.

பழங்களை எப்பொழுதும் கடித்துச் சாப்பிட வேண்டும். அதனை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது கூடாது.

காய்கறிகளுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடக் கூடாது.

காலையில் வெறும் வயிற்றில் பால், காப்பி, ரீ குடிக்கக் கூடாது.

கோதுமையை நல்லெண்ணெய்யுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

சைவ உணவுகளைச் சாப்பிடும்போது பால் குடிக்கக் கூடாது.

மீன் சாப்பிடும்போது தயிர் சாப்பிடக் கூடாது.

முள்ளங்கி கீரை வகைகள் சாப்பிடும்போது பால் குடிக்கக் கூடாது.

முந்தைய செய்தி தேசிய மக்கள் சக்தியின் வவுனியா மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு…
அடுத்த செய்தி மலர்ந்தது விசுவாவசு புத்தாண்டு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பல நோய்களுக்கான ஒரே மருந்து!

மார்ச் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வட இலங்கையில் 56 பாடசாலைகள் மூடப்படும் நிலை !

ஏப்ரல் 9, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வல்வெட்டித்துறை படுகொலையின் வாக்குமூலங்கள்

மார்ச் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்டவிரோத கடற்றொழில்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

ஜூன் 22, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?