லிபரல், கன்சர்வேடிவ் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிகள், டொரொண்டோ நகரில் அதிகரிக்கும் வீட்டு விலையை குறைக்க என்ன திட்டங்களை வைத்துள்ளன என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த திட்டங்கள் டொரொன்டோவின் அதிக விலை கொண்ட வீட்டு சந்தையில் உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
டொரொன்டோவில் வீட்டு விலை உயர்வு சாதாரண மக்களின் வாழ்க்கைச் செலவை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
1980-களில் இருந்து 2010 வரை, டொரொன்டோ மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள வீடுகளின் விலை, ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை விட மூன்று முதல் ஐந்து மடங்கு வரை இருந்தது.
எனினும், ஆனால் 2010-க்குப் பிறகு, டொரொன்டோ நகரத்தில் வீடுகளின் விலை அதீத வேகத்தில் உயர்ந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
