மினுவங்கொடை, பத்தடுகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்ந அடையாளம் தெரியாத இருவர் தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறித்து துப்பாக்கிச்சூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.