‘Clean SriLanka’ தேசிய வேலைத்திட்டத்தின் முன்னாயத்த கலந்துரையாடல் இன்யை தினம்(20) மு.ப 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
‘Clean SriLanka’ தேசியவேலைத்திட்டத்தின் உள்ளடக்கத்தில் ஒன்று சுற்றுச்சூழலை தூமையாக வைத்திருப்பதாகும்.
இவற்றை செயற்படுத்திடும் நோக்கில் எதிர்வரும் 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரைச் சூழலை தூய்மைப்படுத்தும் மாபெரும் சிரமதானப்பணி நடைபெறவுள்ளது. இவற்றை சிறந்தமுறையில் மேற்கொள்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடலாக இது இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், இராணுவத்தினர், பொலிஸார், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.