Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடமாகாணத்தில் திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜெகதீஸ்வரன் எம்.பி

பிப்ரவரி 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடமாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சுக்கான உப குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சுக்கான உப குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதில் உறுப்பினராக நான் இருப்பதால் எமது பிரதேசத்தின் விளையாட்டுத் துறை தொடர்பாக பல விடயங்களை முன்வைக்க முடிந்தது. இது தொடர்பாக பல விடயங்களை சுட்டிக் காட்டினேன். ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கிற்கு தேவையான ஆளணி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தேன்.

அத்துடன், பிரதேசத்தில் காணப்படும் விளையாட்டு கழகங்கள் தொடர்பாக சிறந்த அவதானத்தை செலுத்த வேண்டும் எனவும் வடமாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

போதைப் பொருள் பாவனை, சமூக வலைத்தளங்களில் இருக்கும் இளைஞர், யுவதிகளின் அவதானத்தை நல்ல வழியில் கொண்டு வர விளையாட்டு துறை காணப்படுகின்றது. அதனை ஊக்குவிக்க வேண்டும். எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும், எழுத்து மூல முன்மொழிவுகளை வழங்குமாறும் இளைஞர், விவகார விளையாட்டு துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். அதற்கு அமைவாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் விளையாட்டுத்துறை சார்பாக ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் எனக்கு எழுத்து மூலமாக தந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி யாழில். போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது.
அடுத்த செய்தி யாழ். செம்மணி பகுதியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கானர் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு ஆரையம்பதி விபத்தில் மூன்று குழந்தை உயிரிழப்பு – சாரதி கைது

ஜூன் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது!

ஜூன் 9, 2025
இலங்கை

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

நவம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி வீதியில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து- டிப்பர் வாகனங்கள் செல்ல முற்றாக தடை!

செப்டம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?