வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா பெரியகாளைகோட்டைமடு நெல்லிக்காடு ஆற்றுபகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையங்களை நேற்று செவ்வாய்க்கிழமை(11) பொலிசார் முற்றுகையிட்டு ஒருவரை கைது செய்ததுடன் 10 பீப்பாக்கள் கொண்ட கோடாவை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.ஐ .சில்லாவின் தலைமையில் பொலிசார் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை பெரியகாளைகோட்டைமடு பகுதியிலுள்ள கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர் இதன் போது ஒருவரை ஒரு பீப்பா கோடாவுடன் னைது செய்தனர்.
இதனை தொடர்ந்து நெல்லிகாடு கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டபோது அங்கு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியதுடன் 9 பீப்பாக்கள் கொண்ட கோடாவை மீட்டு அங்கு அழிக்கப்பட்டு வெறும் பீப்பாக்களை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவந்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.