Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மட்டக்களப்பு மட்டிக்கழி அம்மன் பீடம் காணியில் உள்ள மீன்வாடி இதுவரை அகற்றப்படவில்லை – பொது மக்கள் கடும் கண்டனம்.

ஜனவரி 23, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மட்டக்களப்பு அட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்துவந்த அம்மன் பீடம் உள்ள காணியை மட்டு மாநகரசபையினர் தனியார் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க முறைகேடாக வழங்கிய மீன்வாடியை அங்கிருந்து வெயியேறுமாறு கடந்தமாதம் மாவட்ட அபிவிருத்திக்குழு மற்றும் மனித உரிமை ஆணையம் கட்டளையிட்டும் அவரை அங்கிருந்து வெளியேறாமல் உள்ளதாக பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

பார்வீதியில் செழியன் பூங்காவிற்கு அருகில் கடற்கரை பகுதியில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காணியை மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய நிர்வாகம் 50 வருடத்துக்கு மேலாக சட்டவிரோத மண்அகழ்வு மற்றும் காணி அபகரிப்பில் இருந்து பாதுகாத்து ஆலய உற்சவகாலங்களில் புனித மஞ்சள் நீராடுதலும் கும்பஞ் சொரிதல் போன்ற புனித காரியங்களுக்காக பயன்படுத்தி வந்ததுடன் அங்கு வேல் நாட்டப்பட்டு அம்மன் பீடம் அமைக்கப்பட்டு வழிபட்டுவந்தனர்.

இந்த நிலையில் குறித்த காணியை கடந்தவருடம் 2024 ம் ஆண்டு மட்டு மாநகர ஆணையாளர் அந்த காணி மாநகரசபைக்கு உட்பட்டது என போலியான ஆவணங்களை தயாரித்து இந்த காணியை யாரேனும் பன்படுத்துகின்றீர்களா என கிராமசேவகரிடமோ, பொது அமைப்புகளிடமோ, கிராம மக்களிடமோ கேட்டறியாது பிரதேச செயலாளரின் அனுமதியின்றி இந்து மக்களின் புனித தன்மையை இழிவுபடுத்தி மீன்பிடி உரிமையாளர் ஒருவருக்கு மீன்வாடி அமைக்க குத்தகைக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக ஆலய நிர்வாகம் மனித உரிமை ஆணைக்குழு முறைபாட்டையடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் பிரதேச செயலக்தின் கீழ் உள்ள அரச காணியை மாநகரசபையினர் முறைகேடாக குத்ததைக்கு வழங்கியுள்ளதுடன் மீன்வாடியை அங்கிருந்து அகற்றுமாறு தெரிவித்திருந்தனர். அதேபோல் கடந்த 10 ம் திகதி இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் இந்த மீன்வாடியை அகற்றுமாறு தீர்மானிக்கப்பட்டது.

இருந்தபோதும் இந்த இரு தீர்மானங்களை குறித்த அரச திணைக்களம் மீன்வாடியை அகற்றும் செயற்பாட்டை இன்றுவரை செய்யாமல் உள்ளனர். எனவே இது இந்து மத்திற்கும் மக்களுக்கும் செய்யும் அநீதி என ஆலய பரிபாலனசபை மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை உடன் எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி தேர்தல் செலவீன விவகாரம் – அருச்சுனா எம்.பி உள்ளிட்ட ஒன்பது பேரிடம் விசாரணை.
அடுத்த செய்தி யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று நூல் வெளியீடு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கடவுளின் சிலையில் இருந்து இடை விடாமல் கசியும் நீர் – இரவிலும் குவியும் மக்கள்!

பிப்ரவரி 3, 2025
இலங்கை

பாடசாலை காணிக்கான தீர்வு கிடைக்கும் வரை தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வாள் வெட்டு – நால்வர் படுகாயம்

ஜூன் 15, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் – முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

மார்ச் 25, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?