அநுராதபுரம் – கல்வல பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவைக் கைது செய்வது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 2025 பெப்ரவரி 03 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு நீதவான் அனுராதபுரம் காவல்துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, இது தொடர்பாக அநுராதபுரம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்திருந்தனர்.
அதன்படி, அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.