Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

நூலிழையில் உயிர் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்.

டிசம்பர் 27, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், ஐக்கிய நாடுகள் அவை இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

யேமன் தலைநகர் சனா விமான நிலையத்துக்கு டெட்ராஸ் மற்றும் உலக சுகாதார அமைப்பு, ஐ.நா., பிரதிநிதிகள் நேற்று வியாழக்கிழமை விமானம் ஏறுவதற்காக வருகை தந்திருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதுகுறித்து டெட்ராஸ் வெளியிட்ட செய்தியில்,

யேமனுக்கு சுகாதாரம் மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும், பிடித்துவைக்கப்பட்டுள்ள ஐ.நா. ஊழியர்களை விடுவிப்பது குறித்து ஆலோசிக்க சென்றிருந்தோம்.

சனாவில் விமானம் ஏறுவதற்காக காத்திருந்தபோது, விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. எங்கள் விமானப் பணியாளர் ஒருவர் காயமடைந்தார். விமான நிலையத்தில் குறைந்தது இருவர் பலி ஆகியிருக்கக் கூடும்.

விமான ஓடுதளம் சேதமடைந்துள்ளது, சரிசெய்யும் வரை இங்கே காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. நானும், என்னுடன் இருப்பவர்களும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், மக்கள், பணியாளர்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சனா சர்வதேச விமான நிலையம், செங்கடல் துறைமுகங்கள் மற்றும் யேமனில் உள்ள மின் நிலையங்கள் மீதான வான்வழித் தாக்குதல்கள் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குட்டெரெஸ் வலியுறித்தியுள்ளார்.

மேற்கு கடற்கரை மற்றும் யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ உட்கட்டமைப்பை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில், சனா விமான நிலையமும் ஒன்று என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

 

முந்தைய செய்தி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட்டுள்ளார்.
அடுத்த செய்தி ஜமாத்-உத்-தவா அமைப்பின் துணை தலைவர் காலமானார்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

சீனாவில் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு!

ஜூலை 29, 2025
உலகம்

ஈரான் வான்வெளி மீள்திறப்பு -மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து ஆரம்பம்!

ஆகஸ்ட் 3, 2025
உலகம்முதன்மை செய்தி

குவாத்தமாலாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 51 பேர் உயிரிழப்பு !

பிப்ரவரி 10, 2025
உலகம்

அரபு நேட்டோ கூட்டமைப்பு’ உருவாக்கப்பட வேண்டும்-இஸ்லாமிய நாடுகள்!

செப்டம்பர் 16, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?