பிரான்ஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக லாரே பெக்குவாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகின் பிரபலமான அருங்காட்சியத்தில் ஒன்றான லூவ்ரே அருங்காட்சியத்தில் ஒக்டோபர் 19 ஆம் திகதியன்று சுமார் 88 மில்லியன் யூரோஸ் பெறுமதியான நகைகளை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
வெறும் ஏழு நிமிடங்களில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் பிரான்ஸை உலுக்கியது. தற்போதுவரை திருடப்பட்ட நகைகள் கைப்பற்றப்படவிலை. கைது நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
