Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்பாடு இல்லை.

ஜூன் 16, 2024
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மீன்பிடி தடை காலம் 60 நாட்கள் முடிந்து மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த மீன் பாடுகள் இல்லை. மேலும் மீனவர்கள் பிடித்து வந்த இறால், நண்டு, மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததையடுத்து ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, திருவாடானை உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று (15) அதிகாலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று (6) அதிகாலை முதல் கரை திரும்பினர். மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாங்கள் எதிர்பார்த்த இறால், நண்டு, கணவாய் போன்ற விலை உயர்ந்த மீன்கள் அதிக அளவு கிடைக்காததால் மீனவர்கள் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

மேலும், டீசல் விலை உயர்வு மற்றும் மீன்பிடி சாதனங்கள் விலை உயர்வு என கடும் சிரமத்திற்கு மத்தியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த குறைந்த அளவு இறால் மற்றும் நண்டு மீன்களுக்கு தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து கொண்டு உரிய விலை நிர்ணயம் செய்யாமல் ரூ. 700 க்கு விற்பனை செய்யப்பட்ட இறால் 300க்கு கொள்முதல் செய்வதால் மீனவர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

இதனால் 60 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே, மீன்பிடி தடை காலங்களில் அதிக திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தும் நாட்டுப்படகைகளுக்கும் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் மத்திய, மாநில அரசுகள் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அதே போல் தற்போது மீனவர்கள் பிடித்து வந்துள்ள மீன்களுக்கு தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலை நிர்ணயம் செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி இந்தியா மற்றும் கனடாவிற்க்கு இடையிலான போட்டி மழையினால் ஒத்திவைப்பு.
அடுத்த செய்தி 107 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கும் பாகிஸ்தான் அணி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்திக்கு கைகொடுக்க சுயேச்சைக் குழுக்கள் தீர்மானம்

மே 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியா வீதியில் விபத்து – ஐந்து பேர் வைத்தியசாலையில்!

நவம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பயணிகள் பேருந்துகள் 48 மணிநேரத்திற்குள் தகுதி சான்றிதழ் பெறவேண்டும் இது சாத்தியமா??

செப்டம்பர் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி

ஜூன் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?