இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கின் பிரதிவாதியான ஞானசார தேரரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
விசாரணையின் பின்னர், குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு சட்டமா அதிபரால் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


