Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்!

செப்டம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அயோத்தி ராமர் கோயில் நிர்வாகத்தைச் சீரமைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ‘ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்டளையின் முதல் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அயோத்தியில் நடைபெற்ற அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

இப்பதவிக்காக பெறப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்து, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக்குழு இறுதியாக இவரைத் தேர்வு செய்துள்ளது.

சமீபத்தில் கோயில் உண்டியல் காணிக்கை மற்றும் நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் இரு அறங்காவலர்களும் விலகிய சூழலில், நிர்வாகச் செயல்பாடுகளைத் திறம்பட மேற்கொள்ள இந்த புதிய சிஇஓ பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவைச் சேர்ந்த ஜிதேந்திர மிஸ்ரா, இந்திய விமானப்படையில் 38 ஆண்டுகள் பணியாற்றி ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது மேற்கு விமானப் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய அனுபவம் மிக்கவர் ஆவார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிஇஓ, கோயிலின் ஒட்டுமொத்த நிர்வாகம், பக்தர்களுக்கான வசதிகள், கூட்ட நெரிசல் மேலாண்மை, பணியாளர்கள் நிர்வாகம் மற்றும் நிதிச் செயல்பாடுகளை முழுமையாகக் கவனிப்பார்.

அதேவேளையில், கோயிலின் ஆன்மீக மற்றும் மத சடங்குகளில் அவர் தலையிட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக, அறக்கட்டளையின் பொருளாளராக இருந்த கோவிந்த் தேவ் கிரி புதிய பொதுச் செயலாளராகவும், மகேஷ் பக்சந்த்கா புதிய பொருளாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி நீட் இணையதளத்தை ஹேக் செய்த 12-ஆம் வகுப்பு கேரள மாணவர் – ஐஐடியில் பொறியாளராக நியமனம்
அடுத்த செய்தி ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவிசேட செய்திகள்

தமிழக தேர்தலில் முன்னிலை வகிக்கும் தவெக தலைவர் விஜய்

மே 4, 2026
இந்தியா

‘வந்தே மாதரம்’ சர்ச்சை: சோனியா காந்திக்கு அமித் ஷா கடும் கண்டனம்

ஆகஸ்ட் 16, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

இந்திய மருத்துவ நிறுவனத்தின் குடோன் மீது ரஷியா தாக்குதல் …

ஏப்ரல் 13, 2025
இந்தியா

இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் மாறும் – ஆதவ் அர்ஜுனா

ஜூன் 22, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?