Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

ஓடும் அரசுப் பேருந்திலிருந்து விழுந்து 8 பழங்குடியின மாணவிகள் காயம்!

செப்டம்பர் 2, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

புதுக்கோட்டை அருகே திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரெங்கம்மாள் சத்திரத்திலிருந்து பள்ளிக்குச் செல்வதற்காக 8-ஆம் எண் அரசு நகரப் பேருந்தில் 10-க்கும் மேற்பட்ட ஆதி பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பயணித்துள்ளனர்.

அப்போது பேருந்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலின் போது, கதவு அருகே இருந்த ஒரு மாணவியை நடத்துநர் கீழே தள்ளியதாகவும், அதனைத் தொடர்ந்து எதிர்பாராதவிதமாகக் கதவு திறந்துகொண்டதால் அடுத்தடுத்து 8 பள்ளி மாணவிகள் ஓடும் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டுச் சாலையில் விழுந்தனர்.

இதில் தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயமடைந்த மாணவிகளை, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி கிராம மக்களும் பழங்குடியின அமைப்பினரும் திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது பகுதியிலிருந்து முதன்முறையாகத் தலைமுறை கடந்து பிள்ளைகள் பள்ளிக்கும் கல்லூரிக்கும் படிக்க வருவதாகவும், ஆனால் இலவசப் பயணம் என்பதால் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பழங்குடியின மாணவிகளை அலட்சியமாகவும் அவதூறாகவும் நடத்துவதாக வேதனையுடன் குற்றம்சாட்டினர்.

அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திய அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல நிர்வாகம், கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் செயல்பட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணவிகள் ஏறிய பின் ஓட்டுநர் அருகிலுள்ள தானியங்கி கதவு பட்டனை யாரோ அழுத்தியதால் கதவு திறந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் பணியிடை நீக்கம் மட்டும் நிரந்தர தீர்வாகாது என்றும், தங்களது பிள்ளைகள் அச்சமின்றிப் பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்று வரக் காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் சிஇஓ-வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல்!
அடுத்த செய்தி ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’ மூலம் ஹாலிவுட்டில் காலடி வைக்கும் வித்யூத் ஜம்வால்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

கரூர் சம்பவத்திற்கான நினைவேந்தலை நடத்த விஜய் திட்டம்

அக்டோபர் 15, 2025
இந்தியா

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வைத்தியர் ராமதாஸ்

ஜூலை 25, 2026
இந்தியாவிசேட செய்திகள்

இந்தியாவின் இராஜ்யசபையின் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் விலகுவதாக அறிவித்துள்ளார்!

ஜூலை 22, 2025
இந்தியாவிசேட செய்திகள்

தமிழக முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டுள்ள தவெக தலைவர் விஜய்

மே 5, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?