அமெரிக்க அரசாங்கம் கனடியப் பொருட்கள் மீது புதிதாக விதித்துள்ள 50 சதவீத கூடுதல் இறக்குமதி வரிகளுக்கு எதிராக, சுமார் 28 பில்லியன் டொலர்
மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களுக்கு மத்திய அரசு உடனடியாகப் பதில் வரிகளை விதித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, இந்த வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி வரி அதிகரிப்பு, கனடாவைப் பிரித்து பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்டது எனக் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) கடுமையாக விமரிசித்துள்ளார்.
கனடா எந்நாளும் அமெரிக்காவின் ஒரு 'துணை நிறுவனமாக மாறவோ அல்லது கட்டுப்படவோ ஒப்புக்கொள்ளாது எனவும் அமெரிக்கத் தரப்பு சரியான அணுகுமுறையுடன் வரும் வரை பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பப்போவதில்லை எனவும் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
மத்திய தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) இது குறித்துத் தெரிவிக்கையில், அமெரிக்காவின் நியாயமற்ற வரி விதிப்புகளுக்கு எதிராகக் கனடா தனது பொருளாதாரத்தையும் இறையாண்மையையும் பாதுகாக்கப் பதிலுக்குப் பதில்' (Dollar-for-Dollar) நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த வரி அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார நெருக்குதல்கள் காரணமாக, அமெரிக்காவுடனான வர்த்தகச் சார்பைக் குறைத்து, சர்வதேச அளவில் புதிய சந்தைகளைக் கண்டறியும் முயற்சியில் மத்திய அரசு தற்போது கவனம் செலுத்தி வருகின்றது.

