வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை மாலை ஆறாம் திருவிழா இடம்பெற்றது.
ஆறாம் திருவிழாவின் போது , வேல் பெருமான் , வள்ளி தெய்வானை ஆகியோர் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி , பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

