யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பகுதியில் நேற்றையதினம் மின்தடை ஏற்படுவதட்கான காரணத்தை கண்டறிந்து அதனை சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்க் கொண்டுள்ளனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படிந்தமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இவ்வாறு படிந்த தூசியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு சுத்தம் செய்வதன் மூலம் மின்தடை ஏற்படுவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

