Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

ஆகஸ்ட் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அபிவிருத்திப் பணிகளுக்காக 3,900 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது எனவும், அதில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு , பிரதேச சபைகள் மற்றும் மத்திய, மாகாண அமைச்சுகளின் ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியமானது என யாழ்.மாவட்ட செயலர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பெளதீக மற்றும் நிதி முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அதில் மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கும் போது,

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அபிவிருத்திப் பணிகளுக்காக 3,900 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது, குறித்த நிதியின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்து திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக, குறித்த அபிவிருத்தித் திட்டங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், பிரதேச சபைகள் மற்றும் மத்திய, மாகாண அமைச்சுகளின் ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியமானது.

பிரதேச செயலக மட்டத்தில் காணப்படும் சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், சமூக சக்தி திட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீடமைப்புத் திட்டங்கள், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கல் அமைச்சின் வேலைத்திட்டங்கள், சமுர்த்தி வேலைத் திட்டங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

முந்தைய செய்தி யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கான விசேட செயலமர்வு
அடுத்த செய்தி நெடுந்தீவுக்கான படகு சேவைகளை சீராக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உயிருக்கு ஆபத்து- வழக்கறிஞர் அனுஜா பிரேமரத்ன தெரிவிப்பு!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் மூதாட்டி அடித்துக்கொலை…

ஏப்ரல் 20, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் – லெபனான் மோதல் ; பெய்ரூட்டில் தஞ்சம் அடைந்த இலங்கையர்கள்…

அக்டோபர் 5, 2024
இலங்கை

இலங்கை மின்சார சபையின் முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

செப்டம்பர் 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?