நீர் கட்டணத்தை 10 தொடக்கம் 30 வீதம் வரையில் குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணங்களையும் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், இது குறித்து ஆராய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நீர் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு அறிக்கை எதிர்வரும் சில நாட்களில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவரிடம் சமர்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அது தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.