தனமல்வில நிக்கவாவ தெம்மோதர குளப்பகுதியில் கஞ்சா காணப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில் விசாரணையை மேட்கொள்வதற்காக அப்பகுதிக்கு சென்ற பொலிஸாரிடம் சந்தேகநபர் கூறியதாவது,
கஞ்சா தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் தருகின்றேன் எனக் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து குறித்த அதிகாரிகள் 5 இலட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஒரு கஞ்சா செடியை மாத்திரம் அழித்துவிட்டு, ஏனைய செடிகளை அகற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி மொனராகலை பிரதேச குற்ற புலனாய்வு பிரிவை சேர்ந்த நால்வரே இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அதிகாரிகள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

