Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

வாட்ஸ்அப் மூலம் ‘டிஜிட்டல் கைது’: ரூ.2.5 கோடி இழந்த ஓய்வுபெற்ற நீதிபதி

ஆகஸ்ட் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 90 வயதான முன்னாள் மாவட்ட நீதிபதி கணபத் சிங் பண்டாரி, வாட்ஸ்அப் வழி வந்த இணையவழி மோசடியால் ரூ.2.50 கோடியை இழந்துள்ளார்.

கடந்த ஜூலை 28 அன்று இவரை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சீருடையில் தன்னை மும்பை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். ரூ.50 கோடி மதிப்பிலான ஹவாலா பணப் பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதாகவும், அவரது எஸ்பிஐ வங்கிக் கணக்கில் ரூ.40 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, கைது செய்யாமல் இருக்க பணத்தைக் கோரி மிரட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மற்றொரு நபர் தன்னை ரிசர்வ் வங்கி மேலாளர் எனக் கூறி தொடர்பு கொண்டு, நீதிபதியின் பரஸ்பர நிதி முதலீடுகள் மற்றும் இதர நிதி ஆவணங்களின் விவரங்களைப் பெற்றுள்ளார். கடுமையான பயம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளான நீதிபதி, ஆகஸ்ட் 3 முதல் 10 ஆம் தேதிக்குள் சுமார் ரூ.2,50,51,000 நிதியை மோசடி நபர்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். சுமார் 15 நாட்கள் இவரை ‘டிஜிட்டல் காவலில்’ வைத்திருந்த மோசடி கும்பல், ஒவ்வொரு உரையாடலுக்குப் பிறகும் வாட்ஸ்அப் தகவல்களை அழிக்குமாறு வற்புறுத்தியுள்ளது.

பின்னர் தனது ஓய்வூதியக் கணக்கிலிருந்தும் பணத்தை மாற்றுவதற்காக நீதிபதி ஜோஹரி பஜாரில் உள்ள எஸ்பிஐ கிளையை அணுகியபோது, சந்தேகமடைந்த வங்கி மேலாளர் பணப் பரிவர்த்தனையை உடனடியாக நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் இந்த இணையவழி மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து முன்னாள் நீதிபதியின் மருமகன் அளித்த புகாரின் பேரில் ஜெய்ப்பூரில் உள்ள ஜோதி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முந்தைய செய்தி மராத்தி தெரியாவிட்டால் உரிமம் ரத்து: ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு கடும் எச்சரிக்கை!
அடுத்த செய்தி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு முதல்வர் கோரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

திராவிட முன்னேற்றக் கழகம் கபட நாடகம் நிகழ்த்துவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தலைவர் விஜய் விமர்சனம்!

ஏப்ரல் 9, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

இந்தியாவின் நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி

மே 30, 2025
இந்தியாஉலகம்

41 பேர் பலிக்கு காவல்துறையினரே காரணம் – சிபிஐ விசாரணையில் அதிரடித் திருப்பம்

டிசம்பர் 31, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகிறது இந்தியா – நாளை போர்க்கால ஒத்திகை

மே 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?