வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவுள்ளது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவம் கடந்த 19 ஆம் திகதி கொடியற்றத்துடன் ஆரம்பமாகி, மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது.
அந்நிலையில் 23ஆம் திருவிழாவான சப்பர திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்று , 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெறவுள்ளது.
ஆடி அமாவாசை தினமான நாளை மறுதினம் புதன்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளது. தீர்த்த திருவிழாவிற்காக , மாவிட்டபுரத்தில் இருந்து காலை கீரிமலை நோக்கி புறப்படும் மாவை கந்தனுக்கு கீரிமலை கண்டகி தீர்த்த கடற்கரையில் தீர்த்த திருவிழா நடைபெறும்.
ஆடி அமாவாசையான அன்றைய தினம், தந்தையை இழந்தவர்கள் , பிதிர்கடன்களை நிறைவேற்றும் விசேட பூஜை வழிபாடுகளும் கண்டகி தீர்த்த கடற்கரையில் நடைபெறவுள்ளது.
கண்டகி தீர்த்த கரையில் இருந்து மாவை கந்தன் மீண்டும் மாலை 06 மணிக்கு, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் நோக்கி மாட்டு வண்டியில் புறப்படும் நிகழ்வு நடைபெறும்.

