சீனாவின் சோங்கிங் நகரத்தில் இன்று காலை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி மலை பகுதி சரிந்த வேளையில் அதன் கீழ் ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்துள்ளன.
குறித்த மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு 100 மீட்பு குழுவினரும், 200 தீயணைப்பு வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 9 பேரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என கூறப்படுகின்றது .

