8 வயது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழப்பு
பொலன்னறுவை, வெலிகந்த நாகஸ்தென்ன பகுதியில் கால்வாயில் தவறி விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை குறித்த சிறுவன் ஆடுகளை மேய்க்கச் சென்றபோதே வெலிகந்த பகுதியிலுள்ள கால்வாயில் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
