மியான்மர் நாட்டில் இருந்து ஏராளமான ரோஹிங்கியர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் மலேசியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
நேற்று முன்தினம்(8) 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு கப்பலில் மியான்மரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து- மலேசியா எல்லைக்கு அருகில் கப்பலில் இருந்து இறங்கி 3 படகுகளில் மலேசியா புறப்பட்டனர்.
மலேசியா எல்லையான லங்காவி கடல் பகுதில் சென்றபோது திடீரென ஒரு படகு கடலில் கவிழ்ந்ததில் அதில் பயணித்தோர் கடலில் மூழ்கினார்கள்.
பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் விரைவில் செயல்பட்டு கடலில் தத்தளித்து கொண்டிருந்த 13 பேரை மீட்டனர்.இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துவிட்டதாக மலேசியா கடல் சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் மற்ற 2 படகுகளும் எங்கே என தெரியவில்லை, படகில் சென்ற நூற்றுக்கணக்கான அகதிகள் மாயமாகிவிட்டதுடன் அவர்களை தேடும் பணிகளை மலேசிய கடற்படை மற்றும் காவல்துறை மேட்கொண்டுள்ளது. மேலும் உயிர் பலி அதிகரிக்கலாம் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. .


