Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள பாதுகாப்புச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு

ஜூலை 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நேட்டோ உச்சிமாநாட்டிற்குப் பின்னர் கனடாவும் அதன் கூட்டணி நாடுகளும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், பாதுகாப்புச் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பானதாக மாறியுள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில், உறுப்புநாடுகள் 2035 ஆம் ஆண்டுக்குள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

இதில் 3.5 சதவீதம் நேரடி இராணுவச் செலவுகளுக்கும், மீதமுள்ள 1.5 சதவீதம் சைபர் பாதுகாப்பு, முக்கிய உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படவுள்ளது.

பல ஆண்டுகளாக நேட்டோவின் 2 சதவீத பாதுகாப்புச் செலவு இலக்கை எட்டுவதில் சவால்களை சந்தித்து வந்த கனடாவுக்கு, இந்த புதிய 5 சதவீத இலக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கனடா பிரதமர் Mark Carney தலைமையிலான அரசு, பாதுகாப்பு முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய தேவையை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்கான நிதி எவ்வாறு திரட்டப்படும் என்பது குறித்து அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், நேட்டோ நாடுகள் தங்களது பாதுகாப்புத் திறன்களை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேட்டோ உச்சிமாநாட்டின் பின்னர் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்படும் கேள்வி ஒன்றே தற்போது எழுந்துள்ளது.

அதாவது – புதிய பாதுகாப்பு உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான பல பில்லியன் டொலர் நிதியை அரசுகள் எவ்வாறு திரட்டப் போகின்றன என்பதே முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த தென் கொரியா முயற்சி

மே 5, 2025
கனடாமுதன்மை செய்தி

மத்தியஸ்தம் மூலமான தீர்ப்பை கனடா போஸ்ட் நிராகரித்துள்ளது

ஜூன் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

கனேடியர்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கும் அமெரிக்கா

மே 30, 2025
கனடாமுதன்மை செய்தி

கிரீன்லாந்தில் புதிய தூதரகத்தை திறந்து வைக்கும் கனேடிய மத்திய அரசு

பிப்ரவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?