18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளிடம் பணம் அல்லது ஏதேனும் ஒரு கைம்மாறு வழங்கி பாலியல் சேவைகளைப் பெறுவோருக்கு அல்லது அதற்காக அணுகுவோருக்கு விதிக்கப்படும் 6 மாத கால குறைந்தபட்ச கட்டாயச் சிறைத்தண்டனை நாட்டின் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகும் என, கனேடிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம், சிறுவர்களிடம் பாலியல் சேவைகளைப் பெறுவோருக்கு 6 மாத கட்டாய சிறைத்தண்டனை அளிக்கும் முறை, தற்போது மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இத்தகைய குற்றங்களுக்கான குறைந்தபட்ச தண்டனை அரசியலமைப்பிற்கு முரணானது என கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் கியூபெக் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கி இருந்தது.
கனேடிய உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய இந்தத் தீர்ப்பு மூலம், கியூபெக் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனேடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான இந்த 6 மாத கால குறைந்தபட்ச சிறைத்தண்டனையானது ‘கொடூரமான மற்றும் அசாதாரணமான தண்டனை’ வரம்பிற்குள் வரவில்லை என, கனேடிய உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய பெரும்பான்மை அமர்வு
தெளிவுபடுத்தியுள்ளது.

