Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொண்ட்ரியல் ‘வெஸ்ட் ஐலாண்ட்’ பிராந்தியத்தைத் தாக்கிய சூறாவளி – 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பாதிப்பு

ஜூன் 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரியல் நகரின் ‘வெஸ்ட் ஐலாண்ட்’ (West Island) பிராந்தியத்தை நிலைகுலையச் செய்த திடீர் பெருவெள்ளத்தின் பாதிப்புகளிலிருந்து, அப்பகுதி மக்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

மொண்ட்ரியல் நகரின் வெஸ்ட் ஐலாண்ட் பிராந்தியத்தில் உருவான அதிவேகக் கடுமையான இடியுடன் கூடிய சூறாவளி காரணமாக, சில மணிநேரங்களிலேயே 100 முதல் 150 மில்லிமீற்றர் (mm) வரையிலான மழை பொழிந்துள்ளது.

இந்த திடீர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் 20,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஒட்டுமொத்தமாக இருளில் மூழ்கின. மொண்ட்ரியல் தீவின் பியர்ஃபாண்ட்ஸ்-ராக்ஸ்போரோ (Pierrefonds- Roxboro) மற்றும் டோலார்ட்-டெஸ்-ஒர்மோக்ஸ் (Dollard-des-Ormeaux) ஆகிய இரண்டு முக்கியப் பகுதிகளே இந்த இயற்கைச் சீற்றத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள நீர் மிக வேகமாகச் சாலைகளில் பாய்ந்தோடியதால், வாகனங்களை இயக்க முடியாமல் நடுவழியில் சிக்கிக்கொண்ட 12-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டனர்.

இப்பகுதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளின் அடித்தளங்களுக்குள் (Basements) வெள்ள நீர் புகுந்ததால் உடமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
பியர்ஃபாண்ட்ஸ் பிராந்தியத்தில் வசிக்கும் 181 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டு, அங்குள்ள விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள பாதிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் காரணமாக பியர்ஃபாண்ட்ஸ் நூலகம், கலாசார மையம் மற்றும் மார்செல்-மோரின் சமூக நலக் கூடம் உள்ளிட்ட பல நகராட்சி கட்டிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி மொண்ட்ரியல் – ட்ரூடோ விமான நிலையத்தில் இணையச் சேவை முடக்கம் – பயணிகள் கடும் அவதி
அடுத்த செய்தி கியூபெக்கில் புதிய மொழிச் சட்டம் – தகுதிச் சான்றிதழ் இல்லாத வயது வந்த மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழியிலேயே தொழிற்கல்வி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அதிகரிக்கப்பட்ட முச்சக்கரவண்டி கட்டணம்

மார்ச் 23, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் நில அதிர்வு

செப்டம்பர் 18, 2025
கியூபெக்முதன்மை செய்தி

தனது இறுதி உரையை நிகழ்த்தி விடைபெற்றார் முதலமைச்சர் பிரான்சுவா லெகோ

ஏப்ரல் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பவேண்டாம் – வடமாகாண ஆளுநர் கோரிக்கை

மே 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?