எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் 6 மாதங்களில் சட்டம்- ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகத்தை எங்கள் முதலமைச்சர் மாற்றுவார்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றியபோதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெடர்ந்து தெரிவிக்கையில்,
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சிக்காலத்திலேயே அதிகரித்து காணப்பட்டது. துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி வகித்த காலத்தில் குழந்தைகள் மீதான பாதிப்பு 40 சதவீதம் உயர்ந்திருந்தது.
மேலும், தற்போதைய அரசு கடந்த 40 நாட்களாக தமிழகத்தை மறுசீரமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றன. பொலிஸ் பிரிவில் பல்வேறு சீர்திருத்தங்களை முதலமைச்சர் நடைமுறைப்படுத்தி வருகின்றார். என அவர் மேலும் கூறியுள்ளார்.


