ஏறாவூர் சவுக்கடி தளவாய் பகுதியில் 16 வயதான சிறுவன் தாக்கப்பட்ட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவனை கடத்தி சென்று ஆடைகளை அகற்றி மரத்தில் தலைகீழாக கட்டி தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து சிறுவனின் தாயார் இவ்விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலும் மூவர் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


