இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவசர சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தமிழ் மக்களின் நிதியுதவியை முன்னாள் போராளியான எதிர்மன்னசிங்கம் கிரேசியன் கோரியிருந்தார்.
இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் இன்றைய தினம் நேரில் சென்று, சிகிச்சைக்கான அவசரத் தேவைகள் மற்றும் நிதி ஆதரவு தொடர்பாக கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அவசரச் சத்திர சிகிச்சைக்காக நிதியுதவி கோரி வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் நகர பிதாவுமான சிவாஜிலிங்கம் அவர்களையும் நேரில் பார்வையிட்டு கலந்துரையாடினார்.
இதன் போது இருவருக்கும் ஒரு தொகைப் பணத்தை மருத்துவ செலவுகளுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
