மொன்றியல் பிராந்தியத்தின் மோர்சியர்-ஹோசலகா-மைசோனேவ் (Mercier–Hochelaga-Maisonneuve) பகுதியில் இன்று நிகழ்ந்த வாகன விபத்தில் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ந்துள்ளார். அதிவேகமாக வந்த கார் ஒன்று நிறுத்தச் சமிக்ஞையை (Stop Sign) மீறி, மற்றொரு வாகனத்துடன் மோதியுள்ளது. பின்னர் அருகிலிருந்த குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது அந்த கார் மோதி விபத்துக்குள்ளானதாக மொன்றியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 6:00 மணியளவில், மோர்சியர் பிராந்தியத்தின் பொசுவே (Bossuet) மற்றும் ஹோசலகா (Hochelaga) தெருக்களின் சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தக் அதிவேக மோதலின் தாக்கம் காரணமாக, விபத்தை ஏற்படுத்திய காரின் உள்ளே இருந்தவர்களில் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போதைய நிலவரப்படி, உயிரிழந்த நபர் அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரா அல்லது காரில் பயணித்த மற்றுமொரு பிரயாணியா என்பது
குறித்து உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான தடயவியல் மற்றும் அடையாளக் கணிப்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
