பண்டாரவளை பகுதியில் அமைந்துள்ள வர்த்தக தொகுதி வளாகத்தில் சூதாட்ட விடுதி ஒன்று இயங்கி வந்த நிலையில், தற்போது பொலிஸாரால் அவ்விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் இதில் 10 பேர் கைதாகியுள்ளனர்.
இதன்படி பொலிஸாரால் நடாத்தப்பட்ட திடீர் சோதனையின் போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.
கைதானவர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
