ஹட்டன் டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் பொகவந்த்தலாவை பெற்றசோ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
