யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு க மணற்காட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று காலை 10:30 மணியளவில் மனற்காடு பாடசாலை முன்பாக உணர்வு ரீதியாக இடம்பெற்றது
குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் மணற்காடு பங்கு தந்தை அவர்களால் விசேட வழிபாடு ஒன்றுமம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததனை தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் ஈகைச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து இறுதிப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும் உறவுகளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலி இடம்பெற்றது. தொடர்ந்து தமிழின படுகொலையை ஞாபகப்படுத்தும் முகமாக உப்பு கஞ்சி வழங்கப்பட்டது.
இந் நினைவேந்தல் நிகழ்வில் மத குருமார்கள் புலம்பெயர் மக்கள் சிறுவர்கள் இளைஞர்கள் பெண்கள் பொதுமக்கள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் மற்றும் பருத்தித்துறை நகர சபை உறுப்பினர் ஜெய கோபி குடத்தனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ரெஜி என பலரும் கலந்துக் கொண்டனர்.
