யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கதிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு , சங்கானை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
