Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை- விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.

மே 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னாரில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட  குடும்பஸ்தரை எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தனது 14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியான குறித்த சிறுமி யை அவரது தந்தையார் துஸ்பிரையோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் பகுதியைச் சேர்ந்த குறித்த  14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியான சிறுமிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வைத்திய பரிசோதனையில் குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியமை தெரிய வந்துள்ளது.

வைத்தியசாலை நிர்வாகம் வைத்தியசாலை பொலிஸ் ஊடாக மன்னார் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த சிறுமியிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இதன் போது தன்னை தனது தந்தையே துஸ்பிரையோகம் செய்துள்ளதாக  குறித்த  14 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவியான சிறுமி  தெரிவித்த நிலையில் அவரை மன்னார் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

எனினும் தான் குறித்த துஷ்பிரயோகத்தை மேற்கொள்ளவில்லை என   தந்தை  தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த நபரை மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாக்கிய நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் சிறுமியின் தந்தையான   குறித்த நபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

சிறுமி தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முந்தைய செய்தி மேற்குவங்க முதலமைச்சராகப் பதவியேற்ற சுவேந்து அதிகாரியின் அதிரடி உத்தரவு
அடுத்த செய்தி யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை: கண்டு பிடிக்க உதவுமாறு கோரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

நாகர்கோவில் பகுதியில் கஞ்சா மீட்பு

ஜனவரி 14, 2026
இலங்கை

திருக்குறள் வளாகம் யாழ்ப்பாணத்திற்கு பெருமை – நா.வேதநாயகன்

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறுகின்றார் பாப்பரசர் பிரான்சிஸ்….

மார்ச் 23, 2025
இலங்கை

நான்கு அலங்கார மீன் இனங்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது!

செப்டம்பர் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?