வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட கலந்துரையாடல் தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் திரேசாள் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மதத்தலைவர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றது. தவத்திரு வேலன் சுவாமிகள் தலைமையில் ஊடக சந்திப்பு நடைபெற்றது.
வட்டுக்கோட்டை தீர்மானத்தை இளையவர்களுக்கு கடத்தும் முகமாக இந்த மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
