Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கொலை ஒன்றின் தடயங்களை அழித்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஏப்ரல் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

லாஷின் பகுதியில் நடைபெற்ற கொலை ஒன்றின் தடயங்களை அழித்த குற்றத்திற்காக, மொன்றியால் நகரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டு, மொன்றியலின் லாஷின் (Lachine) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இடத்திலிருந்த ரத்தக் கறைகள் மற்றும் இதர தடயங்களைச் சுத்தப்படுத்தி, மறைக்க முயன்றதாக இந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் அந்த இடத்திலேயே இருந்தபோதே, அந்தப் பெண் துப்புரவுப் பொருட்களைக் கொண்டு தரை மற்றும் சுவர்களில் இருந்த ரத்தக் கறைகளை அழித்துள்ளார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையை திசைதிருப்பவும், தடயவியல் ஆதாரங்களைச் சிதைக்கவும் அந்தப் பெண் திட்டமிட்டுச் செயல்பட்டதாக, நீதிமன்றில் அரசுத் தரப்பு வாதிட்டது.

துப்பாக்கியால் சுட்ட நபருக்குப் பயந்துதான் இவ்வாறு செய்ததாக, அந்தப் பெண்ணின் தரப்பு தெரிவித்தது.

எனினும், குற்றத்தின் தீவிரத்தைக் கருதி இவருக்கு 24 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கியூபெக் மாகாணப் பொருளாதாரம் கடந்த ஓராண்டில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது
அடுத்த செய்தி நோயாளிக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மருத்துவருக்கு அபராதம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடாவின் தொலைத்தொடர்பு நிறுவனத்தை குறிவைத்துள்ள சீனா

செப்டம்பர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதத்தை 2.75% ஆகக் குறைத்துள்ளது..!!

மார்ச் 12, 2025
கியூபெக்முதன்மை செய்தி

மெக்சிகோவில் சிக்கியுள்ள கியூபெக்கர்கள்

பிப்ரவரி 24, 2026
கனடாமுதன்மை செய்தி

புகலிடம் கோரி அமெரிக்காவிலிருந்து கியூபெக் மாகாணத்தினுள் நுழையும் ஏதிலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஏப்ரல் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?