Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் உக்கிரமடையும் வெள்ள அபாயம்

ஏப்ரல் 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தின் மேற்கே அமைந்துள்ள உட்டாவே (Outaouais) பிராந்தியத்தில் வெள்ள அபாயம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக காடினோ (Gatineau) நகரில் ஓடும் ஒட்டாவா ஆற்றில் நீர்மட்டம் ஒரே இரவில் 30 சென்டிமீற்றர் உயர்ந்துள்ளதால், அங்குள்ள 164 கட்டிடங்கள் மற்றும் 41 வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

கியூபெக் மாகாணம் முழுவதும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு பதிவாகியுள்ள நிலையில், உட்டாவே பிராந்தியமே அவற்றுள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

காடினோவுக்கு மேற்கே அமைந்துள்ள போர்ட்-கூலோன்ஜ் (Fort-Coulonge) பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மார்ச்சண்ட் பாலம் (Marchand Bridge) பாதுகாப்புக் கருதி மூடப்பட்டுள்ளது.

ஒட்டாவா ஆற்றில் ஏற்படும் நீர் உயர்வு, மொன்றியலைச் சுற்றியுள்ள ரிவியர் டெஸ் பிரைரிஸ் (Rivière des Prairies) ஆற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பியர்ஃபோண்ட்ஸ் (Pierrefonds) மற்றும் லாவால் பகுதிகளில் தற்காலிக அணைக்கட்டுகள் மற்றும் நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வெள்ள நிலைமை குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட், நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் உள்ளது எனத் தெரிவித்தார். எனினும், காலநிலை மாற்றத்தின் காரணமாக இத்தகைய வெள்ளச் சம்பவங்கள் கியூபெக் மாகாணத்தில் அடிக்கடி நிகழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தீயணைப்புப் படையினர் பாதிக்கப்படக்கூடிய வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களை எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கனடிய மருத்துவத் துறையில் பணியாற்றும் மருத்துவர்களால் இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்கள்
அடுத்த செய்தி மொன்றியலில் நிகழ்ந்த கொலை தொடர்பில் வெளியான உண்மைகள்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் லிபரல் கட்சியின் புதிய தலைவராக சார்லஸ் மில்லியார்ட் பொறுப்பேற்பு

பிப்ரவரி 17, 2026
கியூபெக்முதன்மை செய்தி

ஹைட்ரோ – கியூபெக்கின் முன்னாள் ஊழியர் மீதான வழக்கு விசாரணை தாமதம்

அக்டோபர் 7, 2025
கியூபெக்

மொன்றியலில் உள்ள சமூக சேவை அமைப்புகள் தங்கள் சேவைகளைக் குறைக்க தீர்மானம்

மார்ச் 23, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பனிப்புயலை எதிர்கொண்ட எக்லிண்டன் கிராஸ்டவுன் ரயில் சேவை

ஜனவரி 16, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?