அமீரகத்தின் முன்னணி அரசியல் ஆய்வாளர் டாக்டர் அப்துல்காலிக் அப்துல்லா (Dr. Abdulkhaleq Abdulla), அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை மூடுவது குறித்துச் சிந்திக்க வேண்டிய தருணம் இது எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஈரான் – இஸ்ரேல் மோதலின் போது, ஈரான் ஏவிய 90 சதவீதத்திற்கும் அதிகமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமீரகம் தனது சொந்த பலத்திலேயே வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
”தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் அமீரகத்திற்கு இருப்பது நிரூபணமாகியுள்ளது எனவே அமெரிக்கப் படைகள் இனி ஒரு பாதுகாப்பு அரண் அல்ல, மாறாக அவை ஒரு ‘சுமை’ (Burden)” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராணுவத் தளங்கள் இருப்பதாலேயே அமீரகம் தேவையற்ற பிராந்திய மோதல்களில் இழுக்கப்படுவதாகவும், பாதுகாப்பு என்ற பெயரில் அந்நியப் படைகளை வைத்திருப்பதை விட நவீன ஆயுதங்களை வாங்குவதிலேயே அமீரகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த அமெரிக்காவின் ராணுவ ஆதிக்கத்திற்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.
