வவுனியா மாவட்ட ஒளிப்பட புகைப்பட சங்கத்தினரால் தர்ப்பூசணி பழத்துண்டுகள் பொதுமக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
அண்மைக்காலமாக வவுனியாவில் அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனை கருத்திற்கொண்டு வவுனியா மாவட்ட ஒளிப்பட புகைப்பட சங்கத்தினரால் புதிய பேருந்து நிலையம் மணிக்கூட்டு கோபுர புகையிரத வீதி, மன்னார் வீதி, அந்தோணியார் கோவில் வீதி ஆகிய இடங்களில் வைத்து தர்ப்பூசணி பழத்துண்டுகளை பொதுமக்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது அதிகளவான மக்கள் பழத்துண்டுகளை பெற்று உண்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
