மொன்றியல் நகரின் பொதுப் போக்குவரத்து மற்றும் கடவுச்சீட்டு (Passport) அலுவலகங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த
மொஹமட் அப்துல்லா வார்சமே (Mohamed Abdullah Warsame) என்பவரது வழக்கு, தற்போது அவரது மனநலப் பாதிப்புகள் குறித்த விவாதமாக மாறியுள்ளது.
52 வயதான வார்சமே மீது பல பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம், மொன்றியலில் உள்ள வீடற்றோர்
தங்குமிட ஊழியரிடம், தமக்கு வெடிபொருட்களைத் தயாரிக்கத் தெரியும் என்றும் மெட்ரோ ரயில்களில் குண்டுவைக்கப் போவதாகவும் வார்சமே மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
சிறையில் இருந்தவாறே, மொன்றியல் மற்றும் கியூபெக் சிட்டியிலுள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களை அழிக்கப்போவதாகப் பலமுறை தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். வார்சமேயின் சட்டத்தரணி லியோனார்ட் வக்ஸ்மேன் இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தனது கட்சிக்காரர் தீவிரமான சிசோபெர்னியா (Schizophrenia) எனும் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வார்சமே ஒரு காலத்தில் அல்-கைடா (al-Qaida) அமைப்புடன் தொடர்புடையவராக இருந்துள்ளார். 2000-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லேடனைச் சந்தித்துப் பயிற்சி பெற்றதற்காக, அமெரிக்காவில் 92 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து 2010-இல் கனடாவுக்கு நாடுகடத்தப்பட்டார். எனினும், தற்போது அவருக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்புகளுடனும் தொடர்பில்லை என அவரது தரப்பு கூறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
