வவுனியா செட்டிகுளத்தில் தேசிய நேர்மை வாரம் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையின் கீழ் இந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக செட்டிகுளம் சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மற்றும் துட்டுவாகை முத்துமாரி அம்மன் அறநெறிப்பாடசாலையில் இடம்பெற்றது. இதன்போது சிரமதானம், சித்திர கோலப்போட்டி, கதை கூறல் முதலான பல நிகழ்வுகள் நடைபெற்றது.
செட்டிகுளம் பிரதேச செயலாளர் கே.சுலோஜனி அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு கோடீஸ்வரப்பிள்ளை குருக்கள், செட்டிகுளம் இந்து கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார், அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களும் ஆலயப்பரிபாலன சபையினர், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
