தந்தை செல்வாவின் 128வது ஜனன நிகழ்வு வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அவரது நினைவுத்தூபியில் இன்று இடம்பெற்றது.
தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது அவர் தொடர்பான நினைவுரைகளும் ஆற்றப்பட்டிருந்தது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா, மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
